ஊருக்குள் புகுந்த காட்டெருமை: விரட்டும் பணியில் வனத்துறை

அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: அன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இவற்றில் நாள் தோறும் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் யானை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அன்னூர் அருகே உள்ள  வரதயாம்பாளையத்தில் என்ற கிராமத்தில் காட்டெருமை ஒன்று புகுந்தது. 

இதனைப் பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்துள்ள காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



ஆனால், அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் செல்லாமல் கிராம பகுதியில் சுற்றி வருகிறது. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மலையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள கிராமத்திற்கும் காட்டெருமை புகுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுக்குள் உணவு இல்லாததால் காட்டெருமை ஊருக்குள் வந்திருக்கலாம். வன விலங்குகள் காட்டில் இருந்து வெளி வராமல் இருக்கும் வகையில் வன எல்லையிலேயே தேவையான உணவு, தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...