மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் 7 சவரன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணியம்மாள். இந்த மூதாட்டி தனது மகன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் வேலைக்கு சென்று விட வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். 

இது தொடர்பாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகிலிருந்த நிறுவனங்களில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.  மேலும், பேருந்து நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரியும் நபர்களை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அடகு கடையில் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர் செயினை அடகு வைக்க வந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் மூதாட்டியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...