சேஞ்ச் அறக்கட்டளையுடன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து கோவை அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

சேஞ்ச் டிரஸ்ட் (Change trust) மற்றும் ரோட்டரி மெட்ரோ பாலிஸ் (Rotary Metro polis) சார்பாக கோவை அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்துதல், ரத்த தானம் வழங்குதல் மற்றும் மரக் கன்றுகள் நடவு செய்தல் ஆகிய பணிகளில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இதில் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன், இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சியில் விஜய கார்த்திகேயன் பேசுகையில், "மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் இதோடு சேவையை நிறுத்திவிடக்கூடாது. 



நோயாளிகளுக்கு உதவும் வண்ணம் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு முன் உதாரணமாக ரத்தம் தானம் தேவைப்படுபவர்களுக்காக ரத்த தான செயலி ஒன்றை கோவை மாநகராட்சி சார்பில் உருவாக்க உள்ளோம்," என்றார்.

சேஞ்ச் டிரஸ்ட் நிறுவனர் தஸ்லிமா நஸ்ரின் கூறுகையில், "மாணவர்களை சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் வருங்காலங்களில் அவர்கள் அரசு அதிகாரிகளாக வரும் போது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மாணவர்களிடத்தில் உருவாகும்," என்றார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரோட்டரி மெட்ரோபாலிஸ் சார்பாக அரசு மருத்துவமனைக்கு 500 படுக்கை விரிப்புகளும், 70 குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...