கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்பு முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள் 20-ம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும், கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என்றும், இறந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நினைவு தூண் அமைக்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...