நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரண்டு பெண்குட்டி புலிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரண்டு பெண்குட்டி புலிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனசரகத்திற்குட்பட்ட அவரல்லா வனப்பகுதியில் இரண்டு புலிக்குட்டிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய வனத்துறையினர், உயிரிழந்த இரு பெண்குட்டி புலிகளும் பிறந்து இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தாய் புலி இறை தேடச் சென்ற நேரத்தில், குட்டி புலிகள் வேறு ஏதேனும் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.
இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் சரவணன் முன்னிலையில் கால்நடை மருத்துவர் பொன்கலைவானி குட்டி புலிகளின் உடல்களை உடற்கூறு பரிசோதனையை செய்தார்.

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனசரகத்திற்குட்பட்ட அவரல்லா வனப்பகுதியில் இரண்டு புலிக்குட்டிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய வனத்துறையினர், உயிரிழந்த இரு பெண்குட்டி புலிகளும் பிறந்து இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தாய் புலி இறை தேடச் சென்ற நேரத்தில், குட்டி புலிகள் வேறு ஏதேனும் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.
இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் சரவணன் முன்னிலையில் கால்நடை மருத்துவர் பொன்கலைவானி குட்டி புலிகளின் உடல்களை உடற்கூறு பரிசோதனையை செய்தார்.