ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலக் கொண்டாட்டம்

24வது ஈஷா மகாசிவராத்திரி விழா 112 அடி ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவை : 24வது ஈஷா மகாசிவராத்திரி விழா 112 அடி ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 



இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் 'சொல்லேருழவன்' செல்லமுத்து, நடிகை தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர். 



மேலும், தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் லிங்க பைரவி தேவியின் உற்சவ மூர்த்தி பிரமாண்ட ஊர்வலமாய் ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு வந்தடைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை உலகமக்கள் அனைவருக்கும் எடுத்து செல்வதை குறிக்கும் விதமாக சத்குரு மகாயோக யோகேஸ்வரலிங்கம் முன்பு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 



இரவு முழுவதும் அனைவரும் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளில் வழங்குவது ஈஷா மகாசிவராத்திரியின் தனிச்சிறப்பாகும்.  இவ்வருடம் புகழ்பெற்ற பாடகர் சோனுநிகாம் மற்றும் தலெர்மெஹந்தி, மோஹித் சவுஹான் மற்றும் சியன் ரொனால்டோ ஆகியோரின் இசைநிகழ்ச்சிகள் மக்களை முழு இரவும் விழிப்பாக உற்சாகமாக வைக்கும் மருந்தாக இருக்கும் எனத் தெரிகிறது.



மேலும், சந்தோஷ் ஷெட்டி குழுவினர் மற்றும் மணிப்பூர் ட்ரம்மர்ஸ் வழங்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சௌண்ட்ஸ் ஆப் ஈஷா (Sounds of Isha ) இசைக்குழுவினரின் உற்சாகமான இசைதொகுப்புகளும் அரங்கேறியது. மற்றும் 117 தன்னார்வலர்கள் ஆதியோகிக்கு அர்பணிக்கவிருக்கும் மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும் நடைபெற்றது. முக்கியமாக சத்குரு சொற்பொழிவுகளும், மகாமந்திர உச்சாடனையும், நள்ளிரவு தியானமும் பார்வையாளர்களை விழிப்புடனும், உற்சாகத்துடனும் தியான நிலைஉணரவும் வழிவகுத்தது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...