உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த 1,10,008 சிவலிங்க சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.  



தாராபுரம் வாசவி மஹாலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பெண்கள் அரிசிமாவு ,சந்தனம் ஆகியவற்றை கொண்டு மூன்று மாதங்களாக தயாரித்த 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவராத்திரி அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தால்  புண்ணியம் உண்டாகும் என முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர். அனைத்து நலங்களையும் பெறவேண்டும் என்பதற்காக நடத்தபட்ட இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.

மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை கொண்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கத்தின் தோற்றத்தை வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் பார்வையிட்டனர். இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அதற்கான விருதினை சிவலிங்கங்கள் செய்த பெண்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உலக சாதனை பெற்ற சிவலிங்கத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...