சாகுல் ஹமீது மரணம் தொடர்பாக காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொன் சந்திரன்

மேட்டுப்பாளையத்தில் போலீசார் விசாரணையின் போது சாகுல் ஹமீது என்பவர் உயிர்ழன்தது தொடர்பாக அக்காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் போலீசார் விசாரணையின் போது சாகுல் ஹமீது என்பவர் உயிர்ழன்தது தொடர்பாக அக்காவல்நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் போலீசார் கஸ்டடியில் இருந்த சாகுல் ஹமீது என்பவர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் பி.யு.சி.எல்.மாநில இணை செயலாளர் பொன் சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " சாகுல் சமீது மரணம்  தொடர்பாக உதவி ஆய்வாளர் பொன்ராஜ், காவல் நிலைய அதிகாரிகள் மீது பணி இடைநீக்கம் உட்பட துறை சார்ந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாகுல் அமீது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சாகுல் அமீதின் காவல் நிலைய இறப்பு வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176 (1A) ன் கீழ் தனி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் தான் சாகுல் அமீது உயிரிழப்பு நடந்ததாக காவல்துறை வழக்கை ஜோடிக்கிறது. அதற்காக பொதுமக்களை மிரட்டுவது, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுகிறது.

இதுதொடர்பாக தற்போது நடைபெற்று வரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை நம்பிக்கை அளிக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும். உதவி ஆய்வாளர் பொன்ராஜின் முந்தைய  செயல்பாடுகள் மதரீதியாகவும் இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது."இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...