மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.



கோவை: மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோபானாரி அரக்கடவு மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பன்(45). இவர் நேற்று வழக்கம் போல் விவசாய கூலி பணிக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். பணி முடித்து மாலை அரக்கடவுக்கு இரு கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த ஒற்றை யானை ராஜப்பனை துரத்தியது. இதில் பீதி அடைந்த ராஜப்பன் காட்டுப்பாதை வழியாக ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்திய காட்டு யானை ராஜாப்பனை துதிக்கையால் தூக்கி வீசியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவு வெகு நேரம் ஆகியும் ராஜப்பன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் வனத்துறை உதவியுடன் காட்டுப்பகுதிக்குள் சென்று அவரைத் தேடிச் சென்றனர். அப்போது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரது உடலை இன்று காலை மீட்ட பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது யானைகள் வலசைக் காலம் நடைபெறுவதால் அவற்றின் நடமாட்டம் கோவை வனக்கோட்டத்தில் அதிக அளவில் இருந்து வருவதாகவும் கர்நாடகா மலைக்காடுகளில் இருந்து யானைகள் கேரளா வனத்தினை நோக்கி வருவதால் யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வனப்பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...