திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா ஜனவரி 25-ம் தேதி தொடக்கம்

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர், ஜனவரி 23

திருப்பூரில் 15-வது புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25-ம் தேதி முதல் துவங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புத்தகத் திருவிழா வரும் ஜனவரி 25ம் தேதியன்று துவங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற உள்ள இதில், அமைக்கப்படவுள்ள 150 அரங்குகளில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்குபெறவுள்ளன.

கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இதில், 1 கோடியே 25 லட்சம் ரூபாயிக்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டது. இந்தாண்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...