கோவை மாநகர காவல்துறையை பெருமைப்படுத்திய பெண் காவலர் : பாராட்டி பரிசு வழங்கிய நீதித்துறை

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண் காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 22

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண்  காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு பரிசு  வழங்கி கவுரவித்துள்ளார்.

காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக பல காவலர்கள் கோவை மாநகரில் பணியாற்றி வருகின்றனர். 

தன்னலமின்றியும், கடமையை சிறப்பாக செயல்படுத்தியும், சமூக தொண்டாற்றியும் காவல்துறையை கவுரவிப்பவர்கள் கோவை மாவட்டத்தில் ஏராளம். 

அந்த வகையில், நீதிபதியால் பாராட்டப்பட்டு மேலும் ஒரு பெருமையை மாநகர காவல் துறைக்கு சேர்த்திருக்கிறார் பெண் காவலர் ஸ்வப்ன சுஜா. 

சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். 

இடமாறுதலின் பேரில் ஓராண்டுக்கு முன் சிங்காநல்லூர் காவல் நிலையம் வந்த அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகை செய்துள்ளார். 

2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவ்வழக்குகளை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார். 

இந்த நிலையில்,  மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி V.P.வேலுசாமி மற்றும்  காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட வழக்குகள் தொடர்பான கூட்டம் 

இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்தில், வழக்குகளை விரைந்து முடிக்க உதவிய பெண் காவலரை பாராட்டிய நீதிபதி அவருக்கு வெகுமதியாக பரிசினை வழங்கி கவுரவித்துள்ளார். 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு அந்தத்துறை  அதிகாரிகள் பாராட்டுக்களையும், பரிசுகளையும் வழங்கக் கேட்டிருப்போம். 

ஆனால், நீதிபதி ஒருவர்  பெண் காவலரை கவுரவித்த நிகழ்வு ஒட்டுமொத்த போலீசாரையும் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது. 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...