”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 22
”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்மாநில சரக்கு போக்குவரத்து வசதிக்காக ”இ-பில் ஜிஎஸ்டி” முறை பிப்ரவரி 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இ-பில் ஜிஎஸ்டியைப் பதிவு செய்துவிட்டால், மாநிலத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு எந்த தடையுமின்றி ரூ. 50,000 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் உள்ள சரக்குகளை எடுத்துச் செல்லலாம். இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதற்காக சரக்கு வாகன உரிமையாளர்கள், வரி தொடர்பாக அதிகாரிகளையோ, சோதனை சாவடிகளையோ அணுக வேண்டியதில்லை.
இந்த நிலையில், இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளை களைய கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் மாநில வணிகவரித்துறையின் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இ-பில் ஜி.எஸ்.டி. முறை குறித்து எடுத்துரைக்கப்பட இருக்கிறது.
”இ-பில் ஜிஎஸ்டி” முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் வரும் 24-ம் தேதி விளக்கக் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்மாநில சரக்கு போக்குவரத்து வசதிக்காக ”இ-பில் ஜிஎஸ்டி” முறை பிப்ரவரி 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த இ-பில் ஜிஎஸ்டியைப் பதிவு செய்துவிட்டால், மாநிலத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு எந்த தடையுமின்றி ரூ. 50,000 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் உள்ள சரக்குகளை எடுத்துச் செல்லலாம். இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதற்காக சரக்கு வாகன உரிமையாளர்கள், வரி தொடர்பாக அதிகாரிகளையோ, சோதனை சாவடிகளையோ அணுக வேண்டியதில்லை.
இந்த நிலையில், இ-பில் ஜி.எஸ்.டி.யை பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளை களைய கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் மாநில வணிகவரித்துறையின் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இ-பில் ஜி.எஸ்.டி. முறை குறித்து எடுத்துரைக்கப்பட இருக்கிறது.