அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 22
அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கராச்சார் ஜெயந்திர சரஸ்வதி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், இந்து மக்களுக்காகப் பணியாற்றும் ஆன்மிக நம்பிக்கை கொண்ட அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க வேண்டுமென தமிழ்புலிகள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி அர்ஜீன்சம்பத் சங்கராச்சாரியாக இருப்பது போல வேடமணிந்தும், பெரியார், அம்பேத்கர் படங்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகம் முன்பாக தமிழ்புலிகள் கட்சியினர் திரண்டனர். பின்னர், இது தொடர்பாக, காஞ்சி சங்கர மடத்தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.
இந்த நிலையில், சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், பல்வேறு விதமான ஒழுக்கங்கள், ஆன்மீக பயிற்சிகள், வேத உபநிடதங்களைக் கற்றவர்களே சங்கராச்சார் முறைப்படி தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படியிருக்கும் போது, தன்னை சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பது விஷமத்தனமானது. நான் ஒரு இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டன். சங்கரமடம் பிராமணர்களுக்கென்ற ஒருமடம் என்றும், அதில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகக் கூறி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். என்னை ஆயுதமாகப் பயன்படுத்தி தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இதனை நான் முறியடிப்பேன், என்றார்.
அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கராச்சார் ஜெயந்திர சரஸ்வதி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், இந்து மக்களுக்காகப் பணியாற்றும் ஆன்மிக நம்பிக்கை கொண்ட அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க வேண்டுமென தமிழ்புலிகள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி அர்ஜீன்சம்பத் சங்கராச்சாரியாக இருப்பது போல வேடமணிந்தும், பெரியார், அம்பேத்கர் படங்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகம் முன்பாக தமிழ்புலிகள் கட்சியினர் திரண்டனர். பின்னர், இது தொடர்பாக, காஞ்சி சங்கர மடத்தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.
இந்த நிலையில், சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், பல்வேறு விதமான ஒழுக்கங்கள், ஆன்மீக பயிற்சிகள், வேத உபநிடதங்களைக் கற்றவர்களே சங்கராச்சார் முறைப்படி தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படியிருக்கும் போது, தன்னை சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பது விஷமத்தனமானது. நான் ஒரு இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டன். சங்கரமடம் பிராமணர்களுக்கென்ற ஒருமடம் என்றும், அதில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகக் கூறி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். என்னை ஆயுதமாகப் பயன்படுத்தி தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இதனை நான் முறியடிப்பேன், என்றார்.