சங்கராச்சாரியாக நியமிக்க தன்னை பரிந்துரை செய்திருப்பது விஷமத்தனமானது : அர்ஜீன்சம்பத்

அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 22

அடுத்த சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். 

காஞ்சி சங்கராச்சார் ஜெயந்திர சரஸ்வதி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், இந்து மக்களுக்காகப் பணியாற்றும் ஆன்மிக நம்பிக்கை கொண்ட அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க வேண்டுமென தமிழ்புலிகள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி அர்ஜீன்சம்பத் சங்கராச்சாரியாக இருப்பது போல வேடமணிந்தும், பெரியார், அம்பேத்கர் படங்களுடனும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகம் முன்பாக தமிழ்புலிகள் கட்சியினர் திரண்டனர். பின்னர், இது தொடர்பாக,  காஞ்சி சங்கர மடத்தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில், சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் என தமிழ்புலிகள் அமைப்பு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியிருப்பது விஷமத்தனமானது என இந்துமக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில்,  பல்வேறு விதமான ஒழுக்கங்கள், ஆன்மீக பயிற்சிகள், வேத உபநிடதங்களைக் கற்றவர்களே சங்கராச்சார் முறைப்படி தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படியிருக்கும் போது, தன்னை சங்கராச்சாரியாக தன்னை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பது விஷமத்தனமானது. நான் ஒரு இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டன். சங்கரமடம் பிராமணர்களுக்கென்ற ஒருமடம் என்றும், அதில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்கி வைக்கப்படுவதாகக் கூறி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.  என்னை ஆயுதமாகப் பயன்படுத்தி தவறான பிரச்சாரம் செய்கின்றனர். இதனை நான் முறியடிப்பேன், என்றார். 

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...