தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்ட அரசு பள்ளி சமையலறை- பெற்றோர்கள் புகார்

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 22

நூறு மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும், பள்ளியின் சத்துணவு தயாரிக்கும் சமையலறையை தனி நபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை, கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மேலும், மாணவர்களுக்கான சத்துணவை தயாரிக்கப் பயன்படும் சமையலறையை வெளி நபர் ஒருவர் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்.

இதனால், மாணவர்களுக்கான உணவு திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால் போதுமான பாதுகாப்பின்றி மாணவர்கள் உள்ளனர். உயர்கல்விக்காக தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் ஒரே ஒரு ஆரம்பப் பள்ளியிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...