ஜெயலலிதா மரணத்தில் யாரும் கருத்து கூறாமல் இருந்தால் நலம் : ஓ. பன்னீர் செல்வம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணையில் உள்ளதால் அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து சொல்லாமல் இருப்பது ஏற்புடையது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 21

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருவதால் அமைச்சர்கள் உட்பட யாரும் கருத்து கூறாமல் இருப்பது ஏற்புடையது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு வீட்டிற்குச் செல்வதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

சரத்பிரபு-வின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தனிக்கட்சி யார் வேண்டுமானாலும் துவங்கலாம். ஆனால், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும். தினகரன் தனிக்கட்சி துவங்குவதில் அவருடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அவரின் நிலை என்னவென்று அறிய முடிகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாக உள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.9 கோடி இழப்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...