வேலைவாய்ப்பினை உருவாக்க சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கில் சிட்கோ தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 863 பயனாளிகளுக்கு ரூ.1.42-கோடி மதிப்பில் தனி உரிமை நில அனுபவ ஆவணங்கள், வீட்டுமனைப்பட்டாக்கள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கலை அறிவியல் கல்லூரி, அனைத்துப் பகுதிகளுக்கான குடிநீர் வசதி, மேம்படுத்தப்பட்ட சாலைவசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திடும் நோக்கிலே சிட்கோ தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் சதீஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...