நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 டிசம்பர் 30 ம் தேதியன்று மிக சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் ஓவியப்போட்டி, மாவட்ட விளையாட்டு துறை சார்பில் நடைபெற்ற கபடி, பந்து எறிதல், தடகளம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 75 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தலைமையாசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் பேரிடர் காலங்களில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு, பள்ளிகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், கூடலூர் கோட்டாட்சியர் முருகைய்யன், குன்னூர் கோட்டாட்சியர் கீதாப்ரியா, தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ராம்குமார், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...