போலீசாரின் வாகன சோதனையின் போது விபத்து : கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை, ஜனவரி 21

கோவையில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்திய போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார்.



திருச்சி சாலை இராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் நேற்று போலிசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செல்போனில் பேசியபடி வந்துள்ளார். இதில் போலீசார் சாலையின் நடுவே வந்து ஆட்டோவை மடக்கிப்பிடிக்க முயற்சித்தனர். 

அப்போது ஆட்டோவின் பின்னால் வந்த சூலூரை சேர்ந்த விஜேஸ்குமார் (35) என்ற வாலிபர் நிலை தடுமாறியதோடு ஆட்டோவில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். 

மேலும், போலீசார் அஜாக்கிரதையாக வாகனத் தணிக்கை செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். 

இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...