கோவையில் வாகன சோதனையின்போது சாலையில் நடுவே புகுந்து வாகனத்தை தடுத்து நிறுத்த போக்குவரத்து போலீஸார் முயன்ற போது, விபத்து ஏற்பட்டதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால், ஆத்திமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத்தோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை, ஜனவரி 20
கோவையில் வாகன சோதனையின்போது சாலையில் நடுவே புகுந்து வாகனத்தை தடுத்து நிறுத்த போக்குவரத்து போலீஸார் முயன்ற போது, விபத்து ஏற்பட்டதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால், ஆத்திமடைந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத்தோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் ஒருமணி நேரத்திற்கு மேலாக திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள இராஜலட்சுமி மில் அருகே 3 போலீஸார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டு வந்தனர். அப்போது, சிங்காநல்லூரில் இருந்து சுங்கம் நோக்கி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துள்ளனர். இதனை அறிந்த போக்குவரத்து போலீஸார் அவர்களிடமிருந்து தப்பிகாமல் இருக்க சாலையின் நடுவே அவர்கள் வழிமறித்து சாவியை பறித்ததோடு கையை பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வால்பாறையை சேர்ந்த விஜேஷ் குமார் என்பவர் நிலை தடுமாறி முன்னாள் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்து 50 அடி தூரம் வரை இருசக்கர இழுந்து சென்றுள்ளது. இதில், பலத்த காயமடைந்த விஜேஷ் குமாரை பொதுமக்கள் ஆம்புலனஸை வரவழைத்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் விபத்துக்கு போக்குவரத்து போலீஸாரே காரணம் என கூறி அவர்களை சிறைபிடித்த பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் திருச்சி சாலையில் நின்றதால் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸார் தொடர்ந்து அத்துமீறுவதாகவும், சாவியை எடுப்பது, சட்டையை பிடித்து இழுப்பது, சாலையின் நடுவே புகுந்து வழி மறிப்பதாக போலீஸார் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.