பியூஸ் மனுஷ் மீதான அவதூறு வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


கோவை, ஜனவரி 18

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈசா அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

கோவை ஈசா மையம் குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மனுஷ் மீது ஈசா அறக்கட்டளையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் அவதூறு மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ்குமார், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈசா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும், நதிகளை இணைப்போம் திட்டம் குறித்தும், ஈசாவின் செயல்பாடுகள் குறித்தும் வேண்டும் என்றே அவதூறான தகவல்களை தெரிவித்து, பரப்பிக்கொண்டு இருப்பதாக முறையிட்டார். இதனையடுத்து, ஈசா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்த விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...