திருமண ஆசைகாட்டி ஆண்களை ஏமாற்றிய நடிகையை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டார்.


கோவை, ஜனவரி 18

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் அழைத்து சென்று சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த சுருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட சுருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், சுருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சுருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வேலுசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் அழைத்துசென்ற சைபர் கிரைம் போலிசார் அவர்களிடம் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



இதனிடையே, ஏற்கனவே கடந்த ஆண்டு ஸ்ருதியால் பாதிக்கப்பட்ட நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரும் வழக்கு விசாரணையை பார்க்க நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில், மேட்ரிமோனியல் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து ஏமாற்றுவதை ஸ்ருதி வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதுவரை ரூ. 80 லட்சம் வரை தான் ஏமாந்துள்ளேன். இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. என்றார். 

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி வேலுசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...