விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 18
விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (38). இவருக்கும் கோவையை சேர்ந்த சீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக விவாகரத்து செய்ய சீதா முடிவு செய்ததாகத் தெரிகிறது.
விவாகரத்து வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய்குமார் இன்று நீதிமன்றம் வந்தார்.
அப்போது, மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை உட்கொண்டு விஜய்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறியுள்ளனர்.
விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (38). இவருக்கும் கோவையை சேர்ந்த சீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக விவாகரத்து செய்ய சீதா முடிவு செய்ததாகத் தெரிகிறது.
விவாகரத்து வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய்குமார் இன்று நீதிமன்றம் வந்தார்.
அப்போது, மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை உட்கொண்டு விஜய்குமார் தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறியுள்ளனர்.