விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த ஆண் தற்கொலை முயற்சி

விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 18

விவாகரத்து வழக்கிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்த நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் (38). இவருக்கும் கோவையை சேர்ந்த சீதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக விவாகரத்து செய்ய சீதா முடிவு செய்ததாகத் தெரிகிறது. 

விவாகரத்து வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய்குமார் இன்று நீதிமன்றம் வந்தார். 

அப்போது, மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை உட்கொண்டு விஜய்குமார் தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...