ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாக டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதம்

ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 18

ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை முன்பாக உள்ள இரண்டு ஆவின் தேநீர் கடையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் அதிமுக-வின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தினகரன் ஆதரவாளருமான அன்னம்மாவிற்கு சொந்தமான கடையை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னம்மாள் மற்றும் தினகரன் அணியினர் ஆவின் கடை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து அன்னம்மாள் கூறுகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக  நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடையை அப்புறப்படுத்த விடமாட்டோம் என்றார்.

இதனிடையே, தினகரன் ஆதரவாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...