கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சில தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளை மதிப்பதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவை, ஜனவரி 18
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சில தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளை மதிப்பதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேட்டுப்பாளையம் முதல் கோவை வரையிலான 40 கிலோ மீட்டர் பயணத்தில் பொதுமக்கள் வேலைக்காக பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து கோவைக்கு வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலும் நடுத்தர வயதினர் தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
இதனிடையே பயணிகள் சில்லரை கொடுக்க முடியாமல் போனாலோ அல்லது அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்க உள்ள நிலையில் பேருந்து இருக்கையில் அமர்ந்தாலோ அவர்களை சில தனியார் பேருந்து நடத்துநர்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது வழக்கமாக உள்ளது.
இது குறித்து பேருந்து பயணி செல்வராஜ் கூறுகையில், "மாணவர்கள், இளைஞர்கள் போன்றவர்களை பார்த்தாலே ஒருமையில் தான் நடத்துநர்கள் பேசுகிறார்கள். வயதானவர்கள் பேருந்தில் படிக்கட்டில் ஏறும்போது அல்லது இறங்கும் போது தாமதம் ஆனால் ஒருமையில் மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். அதிகாரிகள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
அரசு பேருந்து நடத்துநர்கள் சிலர் பயணிகளிடம் கடுமையாக நடந்துகொண்டாலும் சில தனியார் பேருந்து நடத்துநர்கள் போல நடந்துகொல்வதில்லை என மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "தனியார் பேருந்துகளில் பெரும்பாலும் அனுபவம் இல்லாத சிறு வயது இளைஞர்களையே பணிக்கு நியமனம் செய்கின்றனர். அவர்கள் பொறுமையில்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசு பேருந்துகளில் அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் சில நேரம் கடுமையாகத்தான் நடந்துகொள்கின்றனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பயணிகள் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், "பயணிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை. 5 ரூபாய் பயணச்சீட்டுக்கு 10 அல்லது 20 ரூபாய் பணம் தருவர். ஒருவர் தந்தால் பரவாயில்லை, எல்லாரும் அப்படிதான் தருகிறார்கள். படியில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே கடுமையாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. பயணிகள் ஒத்துழைப்பு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சில தனியார் பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகளை மதிப்பதே இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேட்டுப்பாளையம் முதல் கோவை வரையிலான 40 கிலோ மீட்டர் பயணத்தில் பொதுமக்கள் வேலைக்காக பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து கோவைக்கு வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலும் நடுத்தர வயதினர் தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
இதனிடையே பயணிகள் சில்லரை கொடுக்க முடியாமல் போனாலோ அல்லது அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்க உள்ள நிலையில் பேருந்து இருக்கையில் அமர்ந்தாலோ அவர்களை சில தனியார் பேருந்து நடத்துநர்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது வழக்கமாக உள்ளது.
இது குறித்து பேருந்து பயணி செல்வராஜ் கூறுகையில், "மாணவர்கள், இளைஞர்கள் போன்றவர்களை பார்த்தாலே ஒருமையில் தான் நடத்துநர்கள் பேசுகிறார்கள். வயதானவர்கள் பேருந்தில் படிக்கட்டில் ஏறும்போது அல்லது இறங்கும் போது தாமதம் ஆனால் ஒருமையில் மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். அதிகாரிகள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
அரசு பேருந்து நடத்துநர்கள் சிலர் பயணிகளிடம் கடுமையாக நடந்துகொண்டாலும் சில தனியார் பேருந்து நடத்துநர்கள் போல நடந்துகொல்வதில்லை என மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "தனியார் பேருந்துகளில் பெரும்பாலும் அனுபவம் இல்லாத சிறு வயது இளைஞர்களையே பணிக்கு நியமனம் செய்கின்றனர். அவர்கள் பொறுமையில்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசு பேருந்துகளில் அனுபவம் மிக்கவர்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் சில நேரம் கடுமையாகத்தான் நடந்துகொள்கின்றனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பயணிகள் புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் கூறுகையில், "பயணிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை. 5 ரூபாய் பயணச்சீட்டுக்கு 10 அல்லது 20 ரூபாய் பணம் தருவர். ஒருவர் தந்தால் பரவாயில்லை, எல்லாரும் அப்படிதான் தருகிறார்கள். படியில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே கடுமையாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது. பயணிகள் ஒத்துழைப்பு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.