தினகரனும், கமலும் தனிக்கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை: முதலமைச்சர்

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அப்போது, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க என்று கோஷமிட்டனர். பின்னர் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். அதனைத்தொடர்ந்து விபத்தால் பாதிக்கப்பட்ட 2 தொண்டர்கள் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நிதியுதவி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  பிரதமர் நேரம் ஒதுக்கிய பின்பு சென்னையில் பிரம்மாண்டமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஹஜ் மானியம் ரத்து தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும். என்றார். 

”காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்தால் வலியுறுத்துவேன்” என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...