உறியடிப்போட்டியில் பங்கேற்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய முதலமைச்சர் பழனிசாமி

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை விமான நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடி போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.


கோவை, ஜனவரி 12

பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை விமான நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உறியடி போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.



சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவரை, விமான நிலையத்தில் நாதஸ்வரம், மத்தளம் வாத்தியங்களுடன் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தமிழக மக்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.  தொடர்ந்து, வரும் 16-ம் தேதி நீலகரி வரும் டிடிவி தினகரன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பொங்கல் விழா தருணத்தில் நல்லவர்கள் பற்றியும், நல்லதைப் பற்றி மட்டும் சிந்திப்போம், என்றார். 

மேலும், சிவகாசி பட்டாசு தொழில் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். சிவகாசி பட்டாசு தொழில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதாகவும், தீர்ப்பு வந்த பின்னர், மூத்த வழக்கறிஞர்கள் கொண்டு தமிழக அரசு வழக்கை நடத்தி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார். 

அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை சர்வதேச விமான நிலையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர், உறியடித்து அங்கு கூடியிருந்த மக்களை அவர் உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த அவர், சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...