டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்


கோவை, ஜனவரி 12

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவலர் படை வீரர்கள் (கோவை மாநகரம்) மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பினருக்கு, கோவை மாநகராட்சி ஆணையர் மரு. க. விஜயகார்த்திகேயன் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கோவை மாநகராட்சியோடு இணைந்து 400 ஊர்காவலர் படை வீரர்கள் மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பைச் சேர்ந்த 70 தன்னார்வலர்கள் டெங்கு நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து டெங்கு நோய் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.



கோவை மாநகர ஊர்காவலர் படை சார்பாக தனசேகர், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய தளபதி மற்றும் தேன்மொழி ராஜாராம், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய துணைத் தலைவர் ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.



மேலும், இன்னர் வீல் ஆஃப் கோயம்பத்தூர் அமைப்பின் தலைவர் சாந்தி ராஜசேகர், செயலாளர் பி. கஸ்தூரி வசந்தி, அமைப்பின் மேற்கு மண்டல தலைவர் அனு மெண்டா, செயலாளர் மனிஷா பாஜ்பாய், கிழக்கு மண்டலத்தின் தலைவர் மனிமேகலா. வி. ராஜ் மற்றும் செயலாளர் சாவித்ரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.



Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...