பொங்கல் பண்டிகைக்கு கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கக் கோரி பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை, ஜனவரி 12

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 46 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழுந்தைகளுக்கு இந்த பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். 

கோவையில், சவுரிபாளையம் மற்றும் சூலூர் ஆகிய இரண்டு இடங்களில் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளானது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 45 கேந்தரிய பள்ளிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளதைப் போல பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை மத்திய கல்வி வாரியத்திற்கு உட்பட்ட தமிழக பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும் என கேந்தரிய வித்யாலயா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு சம்மந்தமில்லாத குருகோவிந்சிங் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி, ஜென்மாஸ்டமி, குரு நானக் பிறந்த நாள், கோவர்தன் பூஜா, புத்த பூர்ணிமா போன்ற தமிழகத்திற்கு சம்பந்தமில்லாத நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவதைத் தவிர்த்து பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் தசரா பண்டிகை, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல பொங்கல் விழாவையும் கொண்டாட வேண்டும் எனவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...