கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 11
கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
செல்வபுரம், தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). கணவர் இறந்துவிட்ட நிலையில் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சோதனை மேற்கொள்கையில் ராமாயி அம்மாளின் காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், பீரோவில் இருந்த 17 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, தற்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து மாநகர காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
செல்வபுரம், தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). கணவர் இறந்துவிட்ட நிலையில் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சோதனை மேற்கொள்கையில் ராமாயி அம்மாளின் காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், பீரோவில் இருந்த 17 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, தற்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து மாநகர காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.