”பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு”

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, ஜனவரி 10

நாடு முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக மாதர் சங்க அகில இந்தியப் பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே குற்றம்சாட்டியுள்ளார். 



அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் கோவையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச்செயலாளர் மரியம்தாவ்லே மற்றும் சுபாஷினிஅலி, உ. வாசுகி, சுதாசுந்தராமன், சுகந்தி, பாலபாரதி உள்ளிட்டு நாடு முழுவதும் இருந்து மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சரோஜ்பவனில் இன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய மரியம்தாவ்லே கூறுகையில், பா.ஜ.க. அரசு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலானோர் வறுமையில் வாடி வருகின்றனர்.  மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற திட்டங்களால் அனைத்து தரப்பினரும் பாதித்தனர் என்றாலும்கூட நேரிடையாக பெண்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார கும்பல்களால் சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளது. 

முத்தலாக் முறையை தடைசெய்ய வேண்டுமென்பதில் மாதர் சங்கத்திற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடுப்பு சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எவ்வித நிவாரணத்தையும் பெற்றுத்தராது. இச்சட்டம் இயற்ற அனைத்து தரப்பினரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், இடதுமுன்னணியின் வெற்றிக்காக மாதர் சங்கம் பிரச்சாரத்தில் ஈடுபடும். என்றார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...