பொங்கல் பண்டிகைக்காக ஊதியமின்றி பேருந்தை இயக்கத் தயார்- போக்குவரத்துத் தொழிலாளர்கள்

தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடி ஊதியம் இல்லாமல் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்துகளை இயக்கத் தயார் என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை, ஜனவரி 10

தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடி ஊதியம் இல்லாமல் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்துகளை இயக்கத் தயார் என கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று 7-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தமிழக அரசு உடனடியாக தொழிலாளர்களை அழைத்துப் பேச வேண்டும். தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும். தொழிலாளர்கள் விரும்பாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக இன்று தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம்.

மேலும், தமிழக அரசு சார்பில் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினால் ஊதியம் இல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தபடியே இரண்டு நாட்கள் பொங்கல் பண்டிகைக்காகப் பேருந்தை இயக்கத் தயார்" என்றனர்.

இதனிடையே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...