மானிய விலையில் வீட்டுத் தோட்டக்காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்குதல்

கோவை, ஜனவரி 08

தக்காளி, புடல், பாகல், பீர்க்கன் உள்ளிட்ட கீரை வகைகள் உள்ளிட்ட  வீட்டுத்தோட்ட விதைக் காய்கறி பாக்கெட்டுகள் கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்வதை உறுதிப்படுத்திட கிராம மற்றும் புறநகர் வீட்டுத் தோட்ட காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு சிறப்பு முயற்சியாக வீட்டுத்தோட்ட காய்கறி விதைப் பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் முதலமைச்சரால் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. 

அதன்படி, நடப்பாண்டு ரூ. 20 மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் கத்தரி, தக்காளி, புடல், பாகல், பீர்க்கன், கீரை வகைகள், மிளகாய் மற்றும் கொத்தவரை ஆகிய காய்கறிகளில் ஏதேனும் ஐந்து காய்கறி விதைகள் அடங்கிய 22,000 விதைகாய்கறி பாக்கெட்டுகள்  கோவை மாவட்ட புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் 40 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.20 மதிப்புடைய ஒரு காய்கறி விதி பாக்கெட்டுக்கு அரசு மானியமாக ரூ. 8 வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ. 12 செலுத்தி விதைப்பாக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென நடப்பாண்டில் கோவை மாவட்டத்திற்கு ரூ. 1,760 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக ஆறு காய்கறி விதைபாக்கெட்டுகள் வரை பெறலாம். இப்பாக்கெட்டுகளை கோவை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் புறநகர்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பெற்றுப் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...