ஈஷா யோகா மையத்தில் 40 ரஷ்யர்கள் யோகா பயிற்சி

கோவை, ஜனவரி 08

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெறுவதற்காக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 40 பேர் தமிழகம் வந்துள்ளனர். 



யோகா பயிற்சி கற்கும் ஆர்வம் கொண்டு 40 ரஷ்யர்கள் ஈஷா யோகா மையத்தில் வாரந்தோறும் நடைபெறும் அடிப்படை யோகா வகுப்பான இன்னர் இன்ஜினியரிங் வகுப்பில் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். ஜனவரி 4-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்ற இவ்வகுப்பில் உபயோகா பயிற்சி மற்றும் சாம்பவி மகாமுத்ரா தியானம் ஆகியவற்றை கற்றுக் கொண்டனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ள சூர்ய க்ரியா பயிற்சி கற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆங்கில மொழி புலமை இல்லாதவர்கள். மேலும் சிலர் இதுவே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்குரு, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்திய தூதரக வளாகத்தில் சத்சங்கம் நிகழ்த்தினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

4 நாள் யோகா வகுப்பில் கலந்து கொண்ட நடாஷா என்பவர் இப்பயிற்சி பற்றி கூறுகையில், " நான் ஒரு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுகிறேன்.  நான் உலகின் பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன். பல ஆஷ்ரமங்களுக்கு சென்றுள்ளேன். யோகா பயிற்சிகள் கற்றுள்ளேன். ஆனால், ஈஷாவில் கற்றுக்கொண்ட பயிற்சி கற்றுக்கொள்ள சுலபமாகவும் மிகுந்த பலனளிப்பதாகவும் உள்ளது" என்றார்.

யோகா ஆசிரியர்களில் ஒருவரான யூரிகுஸ்மின் கூறுகையில், ஈஷாவில் ரஷ்ய மொழியில் யோகா நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்று அறிவித்தவுடனேயே நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய துவங்கிவிட்டனர். ரஷ்யா, உக்ரைன், கசக்ஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து ரஷ்யமொழி பேசுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், பயிற்சிகள் கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனக் கூறினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...