கோவையில் தற்காலிக ஓட்டுனரால் விபத்து: அரசுப்பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம்

கோவையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

90 சதவிகித ஓட்டுனர்கள் வேலைக்கு வராத காரணத்தால் அரசு பேருந்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

அதன்படி, கோவை மருதமலை பகுதியை சேர்ந்த இமய பாரதி என்ற தற்காலிக ஓட்டுனர் 76 இலக்கமிட்ட பேருந்தை இயக்கினர்.



காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை நோக்கிச் சென்ற அந்த பேருந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த முதியவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல், சென்னையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய பேருந்து மோதி வாலிபர் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...