நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
நீலகிரி ஜனவரி 05
நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டுதலால் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதிவேகத்தைக் கண்காணிக்கவும், கணக்கிடவும் வேகத்தை அளக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், வாகன ஓட்டிகள் நகர்புறத்தில் மற்றும் நெடுஞ்சாலையில் நிர்ணயித்த வேகத்தைக் காட்டிலும் அதிகமாக 10 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ. 300-ம், அதற்கு மேல் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ. 400-ம், மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1000-ம் அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிக எடை ஏற்றுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற குற்றங்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டுதலால் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதிவேகத்தைக் கண்காணிக்கவும், கணக்கிடவும் வேகத்தை அளக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், வாகன ஓட்டிகள் நகர்புறத்தில் மற்றும் நெடுஞ்சாலையில் நிர்ணயித்த வேகத்தைக் காட்டிலும் அதிகமாக 10 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ. 300-ம், அதற்கு மேல் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ. 400-ம், மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1000-ம் அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிக எடை ஏற்றுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற குற்றங்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.