உதகையில் விபத்துகளை தடுக்க காவல் துறையினருக்கு வேகத்தை அளக்கும் கருவி

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி ஜனவரி 05

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் புதியதாக வேகத்தை அளக்கும் உபகரணங்களை (Speeder Radar Gun) போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக அதிவேகமாக வாகனம் ஓட்டுதலால் விபத்துகள் அடிக்கடி நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அதிவேகத்தைக் கண்காணிக்கவும், கணக்கிடவும் வேகத்தை அளக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் காவல்துறையினருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், வாகன ஓட்டிகள் நகர்புறத்தில் மற்றும் நெடுஞ்சாலையில் நிர்ணயித்த வேகத்தைக் காட்டிலும் அதிகமாக 10 கி.மீ. வேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ. 300-ம், அதற்கு மேல் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ. 400-ம், மிக அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ரூ. 1000-ம் அபராதம் விதிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் அதிக எடை ஏற்றுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற குற்றங்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் தற்காலிக தடை செய்யப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...