காங்கிரஸ் கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராகுல் காந்தி

டிசம்பர் 4

காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் தலைவராக, அவர் போட்டியின்றி தேர்வாகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதால், கட்சியின் நலன் கருதி ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக முதலில் அமைதி காத்து வந்த சோனியா, நாளடைவில் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். 

இதற்காக, கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். துணைத்தலைவராக இருக்கும் ராகுல்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தார். நாளை வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும். வேட்பு மனு வாபஸ் பெறக் கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

எந்தப் போட்டியும் இல்லை என்றால் ராகுல் காந்தி டிசம்பர் 11-ந் தேதி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுவார். முன்னதாக ஜன்பாத்தில் உள்ள சோனியாகாந்தி இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றார். பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். தொடர்ந்து, மாநில தலைவர்கள் வழிமொழிந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாப், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோசினா கிதவாய், ஷீலா தீட்சித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...