ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு- குட்டையின் கரையை உடைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை சுல்தான்பேட்டை பகுதியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் நீர்த்தேக்க குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையின் கரைப்பகுதியை உடைத்துள்ளதாகவும், இதனால் சேமிக்கப்பட வேண்டிய நீர் வீணாகிவருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இது தொடர்பாக புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

எங்கள் ஊரின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் குட்டை ஒன்று உள்ளது. எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், குட்டை வேகமாக நிரம்பி வந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதியான குட்டையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையில் கரையினை உடைத்துவிட்டு நீரை வெளியேற்றிவருகின்றனர்.



இதனால் எங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.



இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...