ஈரோட்டில் பல்வேறு ரயில்வே வசதிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹிரி திறந்து வைத்தார்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹிரி இன்று ஈரோடு ரயில்நிலையத்தை ஆய்வு செய்ததுடன், ஈரோட்டில் பல்வேறு ரயில்வே வசதிகளை திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், ஈரோடு ரயில்நிலையத்தில் முன்பிருந்த தண்ணீர் பிரச்சனை தற்போது இல்லை என்றும், தற்போது அனைத்து ரயில்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  காவேரி நதியில் இன்று அவர் திறந்து வைத்த நீரேற்று நிலையம் மூலமாக பெறப்படும் தண்ணீர் ரயில்நிலையம், மற்றும் ரயில்வே காலனிகளுக்கு சப்ளை செய்யப்படுவதுடன், உபரி நீர் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக கூறினார்.

ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் (Lifts and Escalators) பணி தாமதமாகி வருவதற்கு மண் சப்ளை பற்றாக்குறையும் கட்டுமான ஒப்பந்தக்காரர்களுடன் GST பற்றிய ஒன்றிய கருத்தின்மையுமே காரணம் என்றும், விரைவில் இப்பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  

மேலும், சேலம் கோட்டத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா அமைபதற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், நிர்பயா நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், அவற்றை பொருத்தும் பணி ரயில்டெல் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.  

பின்னர், அவர் ஈரோட்டில் உள்ள டீசல் ரயில் எஞ்சின் பணிமனையில் புதியதாக 2.2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருட்கிடங்கையும், காவேரி நதிக்கரையில் 2.8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் அர்ப்பணித்தார்.  

ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து 1326 மெட்ரிக் டன் கோழித்தீவனம் கொண்ட ரயிலை ஈரோடு எஸ்கேஎம் அனிமல் புட்ஸ் நிறுவனம் தனது கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தொழிற்சாலைக்கு புக்கிங் செய்துள்ள சிறப்பு சரக்கு ரயிலை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர்  வர்மா, சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் மற்றும் இதர சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.    

                              

ஈரோட்டில் இருந்து இம்மாதிரி சரக்கு புக்கிங்  செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். முதல் முறை புக்கிங் செய்யப்பட்ட சரக்கின் மூலமாக ரயில்வேக்கு 12.95 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. எஸ்கேஎம் அனிமல் புட்ஸ் நிறுவனம் இது போன்று ஒரு மாதத்திற்கு சுமார் 7000 மெட்ரிக் டன்கள் புக்கிங் செய்து அனுப்பவும் அதற்காக சாவடிபாளையத்தில் ஒரு புதிய சரக்கு ஏற்றும் முனையத்தை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் ரயில்வேயுடன் இணைந்து அமைக்கவும் முன்வந்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...