சேலம் மேட்டூர் அணை இடையே ரயில் இயக்கத்தில் மாற்றம்

22.09.2017 (வெள்ளிக்கிழமை) ஓமலூர் மேச்சேரி ரோடு இடையே ஒரு சிறு பாலக் கட்டுமானப்பணி காரணமாக சேலம் மேட்டூர் அணை இடையிலான ரயில்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன. 

1.ரயில் எண், 56103 மேட்டூர் அணை சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 

2.ரயில் எண், 56100 ஈரோடு மேட்டூர் அணை பயணிகள் ரயில் சேலம் மேட்டூர் இடையே ரத்து செய்யப்பட்டு ஈரோடு சேலம் இடையே மட்டும் இயக்கப்படும். 

3.மேட்டூர் அணை வரை செல்லும் ரயில் எண். 11063 சென்னை எழும்பூர் சேலம் விரைவு ரயிலின் இரு பெட்டிகள் (S9 மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவற்ற பெட்டிகள்) ரத்து செய்யப்படுகின்றன. எனவே இவை சேலத்தில் நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை வரை பயணிக்காது.  ஆனால் மறுமார்க்கத்தில் இந்த ரயில் பெட்டிகள் வழக்கம் போல பயணிகள் ரயில் எண். 56101 மேட்டூர் அணை ஈரோடு பயணிகள் ரயிலில் சேலம் வரை இணைக்கப்பட்டு பின்னர் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில் எண்.11064 உடன் இணைக்கப்படும்.  

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...