ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் - தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி

தமிழக அரசின் உத்தரவின்படி, உணவு வழங்கல் துறையின் சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,07,049 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், உதகை வட்டத்தில் 31,996 ஸ்மார்ட் கார்டுகளும், குன்னூர் வட்டத்தில் 29,974 ஸ்மார்ட் கார்டுகளும், கோத்தகிரி வட்டத்தில் 18092 ஸ்மார்ட் கார்டுகளும், குந்தா வட்டத்தில் 11089 ஸ்மார்ட் கார்டுகளும், கூடலூர் வட்டத்தில் 22442 ஸ்மார்ட் கார்டுகளும், பந்தலூர் வட்டத்தில் 20554 ஸ்மார்ட் கார்டுகளும் ஆக மொத்தம் 1,34,147 ஸ்மார்ட் கார்டுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளில் எவ்வித கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 72,902 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு படிப்படியாக வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்திற்கு சென்று சேவை கட்டணமாக ரூ.30 செலுத்தி திருத்தம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்களில் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் கார்டு பெற்ற பயனாளி சுமதி கூறுகையில், நான் மடித்தொரை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்து விட்டது. எனவே தற்போது நான் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டாக மாற்றி தந்ததால் நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், பாமாயில், மண்ணெண்ணெய் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதையும், நியாய விலைக்கடையின் பணி நேரத்தையும் ஆகியவற்றை கைபேசிக்கு வரும் எஸ்.எம்.எஸ்ஸின் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தினை கொண்டு வந்த தமிழக அரசிற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...