சிறப்பாக பணியாற்றிய கோவை ஆய்வாளருக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கம் அறிவிப்பு



ஆண்டுதோறும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல்நிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் கணேஷுக்கு, சிறப்பாக பணியாற்றியதற்கான முதலமைச்சரின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். 

விருதுக்கு தேர்வாகியுள்ள காவல் ஆய்வாளர் கணேஷ், நீலகிரி மாவட்டம் தோவாணி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்துள்ளார். கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியில் உயர்கல்விப் படிப்பை முடித்த அவர்,  1989-92 ஆண்டுகளில் இயற்பியல் இளநிலை படிப்பையும், 1993-94 -ம் ஆண்டுகளில் முதுகலை படிப்பையும் முடித்தார். அதோடு, பி.எட் படிப்பை முடித்த ஆய்வாளர் கணேஷுக்கு, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, 1997-ம் ஆண்டு தமிழக அரசின் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற கணேஷ், கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பந்தயசாலை, வெரைட்டிஹால் சாலை மற்றும் அத்தியாவசிய கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். 

தமிழக அரசின் விருது பெறுவது குறித்து காவல்நிலை ஆய்வாளர் கணேஷ் பேசுகையில், சிறப்பாக பணியற்றியதற்காக இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...