கோவையில் மாயமான மாணவிகள் கோழிக்கோட்டில் பத்திரமாக மீட்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் நேற்று(15.09.2017) காலை மாயமாகினர். இதனையறிந்து பதறிப் போன சிறுமிகளின் பெற்றோர்கள், இரண்டு சிறுமிகளும் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சிறுமிகளை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது பள்ளியை புறக்கணித்து எங்கேயாவது சென்றுள்ளனரா? என்ற கோணங்களில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மாணவிகள் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அமிர்தா வித்யாலயா பள்ளியில் இருந்து மாயமான குழந்தைகளா என்பதை முதலில் உறுதி செய்தனர். பின்னர், மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...