வறட்டுப்பாறை எஸ்டேட்டில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்டவசமாக உயிர்தப்பினர்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் தீடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 



காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியில் மணி என்பவரின் வீட்டின் அருகாமையில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததில் மணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. 



அப்போது வீட்டில் இருந்த மணி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மனைவி அனிதாவுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. அருகாமையில் இருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு எஸ்டேட் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வீட்டின் கூரை முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தது. 



இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் வால்பாறை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராட்சத மரம் விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே குடியிருப்பு மற்றும் பள்ளி பகுதிகளில் உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மேலும் பல உயிர்சேதங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...