குடிபோதையில் வாகன தணிக்கை செய்த கோவை போலீஸ்காரர்


கோவை மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (39). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மருத்துவ விடுப்பில் சென்றாதத் தெரிகிறது. இந்த நிலையில், அவர் மரக்கடை பகுதியில் நின்று வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, வாகனத் தணிக்கைக்காக நின்றிருந்த பொதுமக்கள் கார்த்திக்கின் பேச்சால், குடிபோதையில் இருப்பதாக சந்தேகமடைந்தனர். அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்ததில் மது அருந்தியதை, அவர்கள்  உறுதி செய்தனர். 

பின்னர், இது தொடர்பாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், குடிபோதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் கார்த்திக்கை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து,  இது தொடர்பான மருத்துவ அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்பிக்க உள்ளனர். போலீஸ் அதிகாரி கார்த்திக் மது அருந்தியது மருத்துவ அறிக்கையில் நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும எனத் தெரிகிறது. மேலும். பணி விடுப்பில் இருக்கும் போது, இவ்வாறு நடந்து கொண்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவையில் மது போதையில் வாகனத் தணிக்கை செய்த போலீஸ்காரரால், உள்ள சக போலீசார் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...