மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கொடிசியா சிறு தொழில் சங்கங்கள் மனு

தமிழகத்தில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை ஆங்காங்கே மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளபாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுபானக் கடையை மூட உத்தரவிடக்கோரி கோவை கொடிசியா சிறு தொழில் சங்கங்கள் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில், இரண்டு புதிய தொழில்நிறுவனங்களை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது இரு நிறுவனங்களில் ஒன்று, கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்கா, கோவை,  பல்லடம் - கொச்சின் தெற்கு பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் 138 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது.  இதில், கொடிசியாவின் சிறு தொழில் சங்கங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் சுமார் ரூ.1000 கோடி முதலீடு செய்து உள்ளனர்.  இந்த தொழில் நிறுவனங்களின் மூலம் சுமார் 4,000 ஊழியர்கள் வேலைவாய்ப்பை பெற உள்ளனர்.

தற்போது கள்ளபாளையம் தொழில்நிறுவனத்தை அமைப்பதற்கான வெளிக்கட்டமைப்பு திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் பெறும் நிலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.

இந்த சூழலில், கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்காவில் தொழில்நிறுவனம் அமைய உள்ள இடத்தை ஒட்டி, புதிய மதுபானக் கடை அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் எங்களது நிறுவனத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பொருட்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லா நிலை நிலவுகிறது.

இதேபோல, மதுபானக் கடை அமையவிருக்கும் பகுதியின் எதிரே 20மீ தொலைவில் கோவில்களும் உள்ளது. இதில், நாள்தோறும் வழிபாடு நடத்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால். பொதுமக்களும். பெண்களும் இந்த மதுபானக் கடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கள்ளபாளையம் கிராமம், சூலூர் தாலுக்காவில் புதிய மதுபானக் கடை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...