நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கைகோர்த்த ஜேக்டோ- ஜியோ அமைப்பினர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவல் பணிகள், பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தங்களது ஊதிய பிரச்சனை மட்டுமின்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும், உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நீதிகோரியும் ஜேக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் இணைந்து இன்று 7-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில், குடையுடனும், பிச்சை எடுக்கும் வகையில் நாமத்துடனும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.



இதனிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், விடுப்பில் செல்லக்கூடாது என்றும் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதையும் மீறி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது தற்காலிக வேலை நீக்கம் செய்யக்கூடிய 17-பி நோட்டீசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்க நோட்டீசை தபால் மூலமாகவும், நேரிலும் வழங்கி வருகிறார்கள்.

கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக்க நோட்டீசை தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் வினியோகித்து வருகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...