புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவல் பணிகள், பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் இன்று 6-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, செவ்வாயன்று (நேற்று) ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.