சைமா தலைவராக கேபிஆர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் தேர்வு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 58-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஓட்டல் லீமெரிடியனில் நடைபெற்றது. 

பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2017-18-ம் வருடத்திற்கு சைமாவின் தலைவராக கோவை, கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர், சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் முதன்மை அறங்காவலராக உள்ளார்.

மேலும் நடராஜன் அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சைமாவின் துணைத் தலைவர்களாக அவினாசி, எஸ்.சி.ம் டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னர்ஸ் மற்றும் தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குநர் கே.விநாயகம் மற்றும் பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...