தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் மாணவி அனிதா தற்கொலை - கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸார் குவிப்பு

நீட் தேர்வால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகளை அமைத்து, மாணவர்கள் யாரையும் அனுமதிக்காதவாறு, போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களிலும் போலீஸார், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதேபோல,  தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர், திராவிடக் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் கோவை ரயில் நிலையத்தில் சென்னை - மங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த போலீஸார்,  சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்து, ரயில் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். 



அப்போது, 3 கட்சியினரும் சாலையில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு அனுமதிளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  மேலும், தமிழகத்தை விட்டு ஆர்,எஸ்.எஸ் அமைப்பு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...