சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கட்டுரை, குறும்பட போட்டி- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய அளவிலான கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய அளவிலான கட்டுரை மற்றும் குறும்பட போட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் செப்டம்பர் 5 அன்று 10.30 மணி முதல் 1 மணி வரை கீழ்காணும் தலைப்புகளில் நடைபெறுகிறது.

“தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பில் (250 வார்த்தைகளுக்கு மிகாமல்) கட்டுரை போட்டியும், “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு” பற்றிய (2 அல்லது 3 நிமிடங்கள்) குறும்படம் போட்டியும் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

ஊராட்சி அளவில் போட்டிகளை நடத்தி அவற்றில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 1 அல்லது 2 வீதம்) ஊராட்சி அளவிலான குழு தேர்வு செய்யும்.

அவற்றில் வட்டார அளவில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 3 வீதம்) வட்டார அளவிலான குழு தேர்வு செய்யும். மாவட்ட அளவில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 3 வீதம்) மாவட்ட அளவிலான குழு தேர்வு செய்யும்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை மற்றும் குறும்படங்கள் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். போட்டிக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...